நரசிம்மருக்கு இப்படியும் ஒரு பெயர்

சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்குப் பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள். அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம்” என்றனர்.
உடன் இடைக்காடர் அவர்களிடம் “ஏழை, இடையன், இளிச்சவாயன்.. இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள்.. உங்களைத் துன்பம் நெருங்காது..” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான்.
‘ஏழை’ என்பது ராமனையும், ‘இடையன்’ என்பது கண்ணனையும், ‘இளிச்சவாயன்’ என்பது நரசிம்மரையும் குறிக்கும்.
ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார்.
அவரே கிருஷ்ணாவதாரத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாகப் பிறந்தார்.
நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் தன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை ‘இளித்தவாயன்’ எனக் குறிப்பிட்டார். ‘இளித்த’ என்றால் ‘வாயைத் திறந்த’ என்றும் பொருள் உண்டு.
‘சத்யமேவ ஜயதே’ சரியான சொல்தானா?

இது சரியான சொற்றொடரா என்றால், "இல்லை" என்பதுதான் பதில்.
‘சத்யமேவ ஜயதி’ என்பதுதான் சரியான சொல்.
ஆனாலும், அந்தக் கால ரிஷிகளுக்கு அக்காலத்தில் சில வார்த்தைகளை இனிமை கருதி மாற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டதாம். இந்த முறைக்கு ‘அர்ஷப் பிரயோகம்’ என்று பெயர்.
இந்தப் பிரயோகத்தை ரிஷிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். சாதாரண மனிதர்கள் பயன்படுத்தக் கூடாது.
‘சத்யமேவ ஜயதே’ என்பது ரிஷிகளின் வேதவாக்கு. எனவே அதை அப்படியே உச்சரிக்கிறோம்.
விரதமும், விருந்தும்
குறிப்பிட்ட சில நாட்களில் பட்டினி விரதம் இருப்பதும், விரதம் முடிந்ததும் விருந்து சாப்பிடுவதும் வழக்கமாக இருக்கிறது. இது ஏன்?
எல்லா மனிதர்களாலும் எப்போதும் விரதம் இருக்க முடியாது. அதை படிப்படியாக பழக்கப்படுத்திக் கொள்ளவே சாஸ்திரம் குறிப்பிட்ட சில நாட்களை விரத நாட்களாக குறிப்பிடுகிறது.
தெய்வத்திற்குப் பிரியமானது என்றால் இயல்பாகவே நல்லதைச் செய்யும் மனப்பான்மை நமக்குள் வந்து விடுகிறது. அத்தகைய பண்பை வளர்த்துக் கொள்ளவே விரதங்கள் பயன்படுகின்றன.
அதே நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விருந்து.
மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப் பழக்குவதே பண்டிகை கால விருந்துகள்.
எல்லா மனிதர்களாலும் எப்போதும் விரதம் இருக்க முடியாது. அதை படிப்படியாக பழக்கப்படுத்திக் கொள்ளவே சாஸ்திரம் குறிப்பிட்ட சில நாட்களை விரத நாட்களாக குறிப்பிடுகிறது.
தெய்வத்திற்குப் பிரியமானது என்றால் இயல்பாகவே நல்லதைச் செய்யும் மனப்பான்மை நமக்குள் வந்து விடுகிறது. அத்தகைய பண்பை வளர்த்துக் கொள்ளவே விரதங்கள் பயன்படுகின்றன.
அதே நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது விருந்து.
மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப் பழக்குவதே பண்டிகை கால விருந்துகள்.
மானும், மீனும்

எனவேதான் மதுரையில் ஆட்சி செய்யும் அம்பிகைக்கு ‘மீனாட்சி’ என்றும், ‘அங்கயற்கண்ணி’ என்றும் பெயர் ஏற்பட்டது.
அபிராமி அந்தாதியில் அம்பிகையை வர்ணிக்கும் அபிராமிபட்டர் ‘அம்பிகைக்கு மானின் விழியைப் போன்ற கண் இருப்பதாக’ வர்ணிக்கிறார்.
நூறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதியின் நூறாவது பாடலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
விடங்கலிங்கம் கதை தெரியுமா?

இந்திரன் ஒரு முறை சிவனின் விடங்க லிங்கத்தை யாசித்தான். இந்த லிங்கத்தை யோக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் அதை அவனிடம் கொடுத்துவிட்டார்.
அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.
ஒரு சமயம் இந்திரன் வாலாசுரன் என்ற அசுரனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாகச் சொல்லியிருந்தான்.
பூலோகத்தை ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, வாலாசுரனை அழிக்க இந்திரனுக்கு உதவி செய்தார்.
தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “அவருக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான் இந்திரன்.
அவர் இந்திரனிடம் சாமர்த்தியமாக அவன் தினமும் பூஜை செய்யும் விடங்க லிங்கத்தைக் கேட்டார்.
இந்திரனோ, நிஜ லிங்கத்திற்கு பதிலாக முசுகுந்தனை ஏமாற்றி வேறு 6 லிங்கங்களை கொடுத்தான்.
இதையறிந்த முசுகுந்தன் விடங்க லிங்கத்தை அவன் தரவில்லை என்பதை தாரத்துடன் நிரூபித்து, வாக்குக் கொடுத்தால் அதன்படி சரியாக நடக்க வேண்டும் என்று இந்திரனை எச்சரித்து விடங்க லிங்கத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த ஏழு லிங்கங்களை திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு கோவில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முசுகுந்தன்.
பெருமாள் கோவிலில் பவுர்ணமி வலம்

ஆனால் மதுரை கூடலழகர் கோவில் மலைக்கோவிலாக இல்லாவிட்டாலும் பவுர்ணமியின்போது இங்கும் கிரிவலம் நடக்கிறது.
சுவாமி சன்னதியைச் சுற்றி 108 முறை வலம் வருகின்றனர்.
இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால், பக்தர்கள் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மந்திரம் ஓதி 108 முறை வலம் வந்து நாராயணனை வழிபடுகின்றனர்.
இறைவன் தரும் பாதுகாப்பு வளையம்

அதை அவருக்கே அர்ப்பணம் செய்து விடுங்கள்.
உங்களுடைய எண்ணம், சொல், செயல்கள் எப்போதும் தூய்மையாகவும், சிறப்பானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டுங்கள்.
உங்களுக்கு எத்தகைய சிறிய பொருள்கள் கிடைப்பதாக இருந்தாலும் அது அவரது அருளால் மட்டுமே கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்களது எண்ணத்தையும் அவரிடமே ஒப்படைத்து விடுங்கள்.
அதில் எப்போதும் அவரது நினைவை மட்டுமே கொண்டவராக இருங்கள்.
உங்களது பிரார்த்தனையை கேட்கும் அவர், அனைத்தும் நல்லதாகவே நடக்க அருள் புரிவார்.
இறைவன் ஒவ்வொருவரையும் இடைவிடாமல் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.
பின்னால் வந்தாலும், அவரே நீங்கள் முன்னால் செல்வதற்கு வழி காட்டுபவராகவும் இருக்கிறார்.
அவரது அருளே உங்களைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக இருக்கிறது.
இறைவனுடைய அருளாகிய ஒளி மட்டுமே, அனைவரது இதயத்திற்கும் ஒளி என்னும் அறிவைத் தருவதாக உள்ளது.
உலகம் மீது கருணையும், இரக்கமும் கொண்டு காப்பவராக இருக்கும் இறைவனே அனைத்திலும் அனைத்துமாக இருக்கிறார்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
0 Response to " "
Post a Comment